
இந்திரவிழா படத்தில் ஹேமமாலினி என்ற முன்னாள் கவர்ச்சிக்கன்னியின் பெயரைத் தாங்கி அறிமுகமானர் இளம் நடிகை ஷ்ருதி பிரகாஷ். அவரது உடல் தோற்றத்தைக் கண்டு இனி நமீதா வீட்டுக்குப் போய்விட வேண்டியதுதான் என்ற புரட்சிரமான கண்டுபிடிப்பைச்செய்தது தமிழக மீடியா. நமீதாவின் கால்ஷீட் கிடைக்காத பலரும் ஹேமமாலினியின் வீட்டு வாசலில் நிற்க ஆடிப்போனாராம்.
“ இந்திர விழாவுல க்ளாமர் பண்ணினேன். இல்லன்னு சொல்ல்ல. அதுக்காக நான் அதே மாதிரி கேரக்டர்ஸ்தான் பண்ணுவேன் முடிவுக்கு வந்துடுறாங்க. சில பேர் ரெக்கமண்டேஷனோட வர்றாங்க. கதை என்ன்ன்னு கேட்டா... பொத்தாம் பொதுவா நல்ல கதையத்தான் எடுப்போம். டிஸ்கஸன் நடந்துகிட்டு இருக்குங்கிறாங்க.
நான் எப்படி கால்ஷீட் கொடுக்க முடியும். அப்புறம் கதைன்னு வந்து சொன்னவங்களும் என்னை எப்படி விஷூவலா எக்ஸ்பிளாய்ட் பண்ணலாம்ண்னு பார்க்கிராங்க. அதான் நல்ல கேரக்டர் கிடைச்சா தமிழ்ல பண்ணுவோம்ன்னு இங்கே வந்துட்டேன்” என்று பெங்களூரில் இருந்தபடியே கைபேசி வழியே கொதிக்கிறார்.
“மொதல்ல ஹேமமாலினிங்கிற பேரை மாத்துனதே இந்த மாதிரி தப்பான எண்ணத்த மாத்தத்தான்” என்றவர் நடிகர் ஜீவனுடன் நான் அவனில்லை இரண்டாம் பாகம், சத்யராஜ், சுந்தர்.சி ஆகியோருடன் "குரு சிஷ்யன்' படங்களில் நடித்து முடித்து விட்டு தமிழில் நல்ல பாத்திரங்கள் எதுவும் அமையாததால் கன்னடத்தில் “ ஆடு...ஆடு...ஆட்டா” என்ற படத்தில் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான ‘திருட்டுப் பயலே' படத்தின் கன்னட ரீமேக்தான் இந்தப்படம்.
“ திருட்டு பயலே படத்தைப் போட்டுக் காட்டி சோனியா அகர்வால் கேரக்டர்தான் நீங்க பண்றீங்கன்னு சொன்னாங்க. உடனே ஒகே சொல்லிட்டேன். அப்பிடியொரு க்யூட் கேரக்டர். அதுவே மாளவிகா கேரக்டர் பண்ணுங்கண்ணு சொல்லியிருந்தா நோ சொல்லியிருப்பேன். “ என்ற ஸ்ருதியிடம் உங்களை எல்லோரும் நமிதாவுக்கு போட்டி என்றல்லவா கோடாம்பாக்கத்தி பேசினார்கள் என்றால், “நமீதா என்னை விட சீனியர்; அவரோடு என்னை ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல. நிச்சயமா நான் அவர் வழியை தேர்ந்தெடுக்கிற பொண்னு இல்ல.
அதுதான் வழின்னு நினைச்சிருந்தா என் கையில இப்போ பத்து படம் கூட வச்சிருக்க முடியும். கதையில்லாம க்ளாமர் பன்றதுல எனக்கு விருப்பமில்ல. என்னோட உடம்பை கேரக்டருக்காக "ஸ்லிம்' ஆக மாற்றவும் தயாராக இருக்கேன். எனக்கு நடிக்க வாய்ப்பு வேணும். இயக்குநர்கள் நெனைச்சா முடியும். தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் வாய்ப்புகள் வந்தாலும் தமிழ்ல நல்ல நடிகைன்னு பேர் வாங்கனும். இது தப்பான ஆசையா என்ன?” என்கிறார். இவரது கேள்விக்கு கோடாம்பாக்கத்திடம் பதில் இருக்கிறதா?
இன்னொரு நமிதா எங்கே?
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம்
வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
வலைப்பூக்கள்
Archives
About this blog
என் நண்பனிடம் இருந்து கற்றுக்கொண்டதன் மூலம் 26.12.2009 அன்றிலிருந்து தொடங்கப்பட்ட இந்த வலைப்பூ முற்றுமுழுதாக சினிமா செய்திகளை தாங்கியது "தமிழ்சிகரம்"






0 comments:
Post a Comment