சிம்புவும் - த்ரிஷாவும் ஜோடி சேர்ந்திருக்கும் இரண்டாவது படம் விண்ணைத் தாண்டி வருவாயா . முதலில் இருவரும் டூயட் ஆடிய படம் 'அலை'. இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்துட்டா
காதல் என்று கும்மியடிப்பது தமிழ்சினிமாவுக்கு புதிதா என்ன?
சிம்புவும்-த்ரிஷாவும் காதலிக்கிறாங்கப்பான்னு எந்த புண்ணியவாளனோ கிளப்பிவிட்ட புரளியில் மீடியா இஷ்ட்த்திற்க்கு செய்திகளை உற்பத்தி செய்ய அந்த செய்திகளே சிம்பு த்ரிஷா இருவரிடமும் நெருகத்தை வளர்த்திருக்கிறதாம்.
சமீபத்தில் சென்னையின் பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் விண்னைத்தாண்டி வருவாயா டீம் சென்னை இசை வெளியிட்டை முன்னிட்டு இரவு பார்ட்டில் கும்மாளம் போட்டிருக்கிறது. இந்த பார்டிக்கு வந்த சிம்புவும் த்ரிஷாவும் நட்சத்திர விடுதியின் ரூப் கார்டன் தனிமையில் இரவு 1 மணிவரை முழ்கி விட்டார்களாம்.
அதேபோல விண்ணைத்தாண்டி வருவாயா பாடல் காட்சி படப்பிடிப்புக்காக மால்டா தீவுக்கு சென்றபோது இருவரும் நெருக்கமாக இருந்ததாகவும் கவுதம் மேன்ன் வட்டாரத்திலிருந்து நம்பிக்கையான தகவல். ஆனால் சிம்பு இப்போதும் இதை மறுக்கிறார். "உண்மைய சொல்லப்போனா பாடல் காட்சிக்காக மால்டா தீவுக்கு போனபோது த்ரிஷாவிடம் நான் பேசக்கூட நேரமில்ல. அந்த அளவுக்கு நான் எனது பர்சனல் வேலையில் பிஸியா இருந்தேன். எனது இயக்கத்தில் தயாராக இருக்கும் இரண்டு படங்களான 'மன்மதன் -2', 'வாலிபன்' ஆகிய படங்களுக்கான ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்துவிட்டேன். கே.வி. ஆனந்த் படம் முடிந்த கையோடு முதலில் வாலிபனை ஆரம்பிக்கப்போகிறேன் என்றார் தனக்கு நெருக்கமான மீடியா நண்பர்களிடம்.
மிக முக்கியமான செய்தி. வாலிபன் படத்தில் சிம்புவின் கேரக்டர் பெயர் சார்லஸ் ஆண்டனி. அதாவது பிரபாகரனின் மகன் பெயர். எப்படியிருக்கு சிம்புவின் இந்த அதிரடி.
புலி வருது...! புலி வருது...! சிம்பு பேர்ல புலி வருது!
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம்
வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
வலைப்பூக்கள்
Archives
About this blog
என் நண்பனிடம் இருந்து கற்றுக்கொண்டதன் மூலம் 26.12.2009 அன்றிலிருந்து தொடங்கப்பட்ட இந்த வலைப்பூ முற்றுமுழுதாக சினிமா செய்திகளை தாங்கியது "தமிழ்சிகரம்"






0 comments:
Post a Comment